Monday, February 8, 2010

அம்மா என்றொரு அற்புதம்

அன்புள்ள அம்மா.
உன்னிடம் கேட்பதற்கு
நிறைய கேள்விகள் உண்டு.

ஆனால் முகமுகமாய்
பேசமுடியாமல்
பாழாய்ப்போன
நாகரீக வெட்கம் தடுக்கிறது.

எனவே கவிதைதான்
என் கைக்கருவி.

அம்மா!

* நீ என்னை வைத்திருந்த
கருவறையின் கதகதப்புக்கு
என்ன கைம்மாறு செய்வேன்?!

* கருவில் உன்னை
நிரம்ப உதைத்தேனா?

* என்னைப் பெற்றெடுக்கையில்
அதிகமாய் வலித்ததா?

* பசிக்காய் அழுதழுது
உன் தூக்கம் கெடுத்தேனா?

* பாலூட்டும்போது உன்னை
காயப்படுத்தினேனா?

எல்லாவற்றுக்கும் ஏதோ
என்னால் முடிந்ததாய்
கவிதை கருப்பையில்
உனை சுமந்து பெறுகிறேன்.

No comments:

Post a Comment